சிந்திப்பதுக்கு எனியும் நேரம் இல்லை செயலில் இறங்குங்கள் தடையை அகற்றுங்கள்,பகை முடித்து தமிழீழம் வெல்லுவோம் நாங்கள் சுதந்திர வேட்க்கை போராளிகள்

சிந்திப்பதுக்கு எனியும் நேரம் இல்லை செயலில் இறங்குங்கள் தடையை அகற்றுங்கள்,பகை முடித்து தமிழீழம் வெல்லுவோம் நாங்கள் சுதந்திர வேட்க்கை போராளிகள்
((((((எம்மை தொட்டவனை விட்டதும் இல்லை வாழ்க்கையில் மறப்பதும் இல்லை அதன் வலியை வாழ் நாள் பூராக உணர்த்தியே தீருவோம்)))))


பெற்றெடுத்த அன்னையையும் நாம் வாழ்ந்த மண்ணையும் உயிராய் உயிர் உள்ளவரை நேசிப்போம் என்றும் அன்புடன் ஈழம்போய்ஸ் பரத்




எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்

`பழந்தமிழன் வீரம் இன்னும் செத்துப் போகவில்லை! தமிழ்ப் பரம்பரைக்கே சரணாகதிப் பழக்கமென்றுமில்லை!

"கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்

அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்

பயந்தவன் தனக்கே பகைவனானான்

என்றும் துணிந்தவன் உலகிற்கு ஒளியானான்!'


வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்...
அன்னைக்கு முதல் வணக்கம்,
தமிழுக்குத் தலைவணக்கம்,
தமிழருக்கு வீர வணக்கம் !!!
வாழ்க தமிழ், வளர்க
தமிழினம் !!!
=======================
"நீ போகும் பாதையில் எவ்வித தடங்கலும் இல்லையென்றால் அது உன் பாதை அல்ல....
யாரோ கடந்து போன பாதை... "


உயிர்கள் உயிர் கொள்வது ஒரே முறை
அதில் என்றும் வேண்டாம் குறை நிறை..
உயிர்கள் அனைத்தும் ஒன்றாம்
அதை மதித்து வாழ்வது நன்றாம்..
தாழ்வு பகைமை காண்போர்க்கு
இடமில்லை இனிமேல் மண் மீது
என்று சங்கே நீ முழங்கு..!

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா'

eelamboys@hotmail.fr

hello friends,plzz add my id
plzzzzz give me photo comments or my page comments,
thanxxx u very much friendsssss
bye
tc

தமிழ் உணர்வு உள்ள போராளிகள் நாங்கள், நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல,தமிழுக்கு தமிழால் அன்பு செலுத்துபவர்கள்,அன்புள்ள சகோதர சகோதரிகளே தயவு செய்து தமிழர்களிடம் தமிழில் கதையுங்கள்,
உங்கள் தாய்த் தமிழை மதிக்காவிடினும் காலில் போட்டு மிதிக்காதிர்கள்,தாயகம் காத்திட நாம் தமிழால் ஒன்றினைவோம் எம் தமிழீழத்து உறவுகளே,
என்றும் நன்றியுடன் ஈழம்போய்ஸ் பரத்




வீரன்
என்றால் நேருக்கு நேர் மோதடா புற முதுகில் குத்துவது வீரன் இல்லையடா அதுக்கு வேற பெயர் இருக்கடா

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு




இ‌ந்த பழமொ‌ழி‌ உருவானத‌ற்கு ஒரு புராண‌க் கதை உ‌ண்டு. அதை
குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.

அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான்.

கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொரு‌ள்.



# Posté le dimanche 04 janvier 2009 20:14

Modifié le lundi 14 septembre 2009 09:13

V/ VAVUNIYA TAMIL CENTRAL COLLEGE

V/ VAVUNIYA TAMIL CENTRAL COLLEGE
V/ Tamil Central College (national school) One of the Tamil Central College. most of the student get admission to the Universities. thired highest marks gained by this school in the...

தோல்வி நிலையென நினைத்தால்

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...?

விடியெலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...?
உண்ர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...?



அன்புள்ள ஈழத்து உறவுகளே,எம்முடன் நீங்கள் இணைந்துகொள்ள விரும்பினால் எமது இணைய முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள், sayisgaran@hotmail.com என்றும் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு விடை பெறுவது உங்கள் அன்பான பரத்
நன்றி வணக்கம்





# Posté le lundi 05 janvier 2009 09:40

Modifié le samedi 04 juillet 2009 21:52

சுடர்விடும் சூரியனாக இருந்த பிரசாந்த் அண்ணா மறைய வில்லை மீண்டும் உதயமாவர்

சுடர்விடும் சூரியனாக இருந்த பிரசாந்த் அண்ணா மறைய வில்லை மீண்டும் உதயமாவர்
அன்புள்ள சகோதர சகோதரிகளே கண்ணீர் அறிவித்தல், எம் இனிய அன்பு அண்ணா உயிர்த் தோழன் பிரசாந்த் எம்மை விட்டு இன்று விலகி சென்று விட்டார் எங்கள் கண்களை கடலாக்கி விட்டு தன்னந் தனியே விண்ணகம் சென்று விட்டார் என்பதை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் நாம் அறியத் தருகின்றோம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம் என்றும் உங்கள் நண்பர்கள்



எம் உயிர் தோழனே!
எம் உயிரினிலும் மேலான பிரசாந்த் அண்ணாவே!
எம்மை விட்டு செல்ல துணிந்தது ஏனோ!
அழகிய உறவாக நட்பின் சிகரமாக எம் இடையே வாழ்ந்தவனே!
நட்பின் இலக்கணமாக அன்பின் உருவமாக வீரத்தின் விழைநிலமாக சிறப்புற்றவனே!
எம்மை விட்டு விலகிச் செல்ல எப்படித்தான் மனம் வந்ததோ!
கண்களுக்குள் கண்மணியாக இருந்தவன் இன்று _கண்களை கடலாக்கி விட்டு சென்றது ஏனோ!
எம் உயிரான பிரசாந்த் அண்ணாவே!
நெஞ்சம் பட படக்கின்றதே இதயம் வெடிக்கின்றதே!
யார் எமக்கு ஆறுதல் சொல்வர்!
எமக்குள் வீரத்தையும் மனத்திடத்தையும் வளர்த்தவன் நீயன்றோ
உன் இழப்பு கண்டு துடி துடித்து விட்டோம்!
உன் அன்னைக்கு எப்படி கூறுவோம்
நீ எம்மை விட்டு விலகி _விண்ணகம் சென்றதை பிரசாந்த் அண்ணாவே!
உன் அன்னை உன்னில் வைத்த பாசம் அன்பு நாம் அறிவோம் எப்படிடா கூறுவோம் _நீ இல்லை என்று நம்முடன்
அந்த உயிர் தெய்வத்துக்கு என்ன பதில் சொல்லி உன் இழப்பை ஆற்றுவோம் அண்ணா!
எம்மைத்தான் பிரிந்து செல்ல முயற்சித்தாய்_உயிரினிலும் மேலான அழகிய உறவான அம்மாவை விட்டு செல்ல எப்படி துணிந்தாய் பிரசாந்த் அண்ணாவே!!
இல்லை இல்லை நீ எம்மை விட்டு செல்லவில்லை என்றும் எப்பவும் உயிர்த் தீயாக எமக்குள் சுடர் விட்ட வண்ணம் உங்கள் நினைவுகள் மீட்டிய வண்ணம்
எம்முடன் வாழ்வாய்!
கருங்கல்லில் பொறிக்கப் பட்ட சிற்பம் போன்று எம் ஒவ்வரு நண்பர்களிடத்தில் மனதில் உயிர் ஓவியமாக செழித்து மென்மேலும் வளருவாய்!எம் உயிர்த் தோழனே பிரசாந்த் அண்ணாவே!!!!!!!


கடல் அலை போன்று உங்கள் நினைவுகள் எம்மை முட்டி மோதுகின்றது
என்றும் உங்கள் உயிர் நண்பர்கள்

# Posté le lundi 05 janvier 2009 09:46

Modifié le lundi 06 juillet 2009 07:41

காற்று காண்பதற்கு இல்லை! வீரம் அடிமைப்படுத்துவதற்கு இல்லை!!!

காற்று காண்பதற்கு இல்லை! வீரம் அடிமைப்படுத்துவதற்கு இல்லை!!!
தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய் மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ
...
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழ்ப் பற்று போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ
...
நம்
மூச்சிலும் காற்றிலும்
கன்னித்தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துகள்
வற்றாது ஓடுதல் கூடாதோ
.....
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

# Posté le lundi 05 janvier 2009 09:50

Modifié le lundi 10 août 2009 16:36

V/ VAVUNIYA TAMIL CENTRAL COLLEGE "

V/ VAVUNIYA TAMIL CENTRAL COLLEGE "
எம்மை தொட்டவனை விட்டதும் இல்லை வாழ்க்கையில் மறப்பதும் இல்லை அதன் வலியை வாழ் நாள் பூராக உணர்த்தியே தீருவோம்




கிடைத்ததை காதலிப்பது Compramise.... காதலித்தது கிடைப்பது Success..... கிடைக்காதுன்னு தெரிந்தும் Love பன்றதுதான் உன்மையான காதல் !!!

உனக்காக யார் வாழ்கிறார்களோ... அவர்களை யாருக்காகவும் விட்டுக்கொடுத்து விடாதே..!

# Posté le lundi 05 janvier 2009 09:54

Modifié le lundi 06 juillet 2009 07:42

""அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானதடா தம்பி... பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரு நொடியேனும் வீரமாகப் போராடி வாழ்ந்து சாவதே மேலானது.

""அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானதடா தம்பி... பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரு நொடியேனும் வீரமாகப் போராடி வாழ்ந்து சாவதே மேலானது.
அன்பான உறவுகளே!!!
ரோட்ல 5 பேர் சேர்ந்து நின்று தண்ணி அடிச்சு நான்தான் கங்க்ஸ் நாங்கதான் எல்லாம் என்று உங்களுக்குள்ளே சத்தம் போட்டா எல்லாம் நீங்க கங்க்ஸ் ஆக முடியாது அத முதல் புரிஞ்சுக்குங்க சொல்றது விளங்குதா??
நாங்க பார்க்கத்தான் பசு??பத்திக்கிட்ட புலி??சொல்லமாட்டம் செய்து காட்டுவம் பார்க்க தயாரா??
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le lundi 05 janvier 2009 09:57

Modifié le jeudi 13 août 2009 08:50

தோழனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது உயிரை கொடுக்குமளவுக்கு தோழன் கிடைப்பது அரிது....

தோழனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது உயிரை கொடுக்குமளவுக்கு தோழன் கிடைப்பது அரிது....
"போர்களத்தில் உனக்கு எதிரில் துணிவாக நிற்கும் எதிரியைக் கூட நம்பலாம் - ஆனால் உன் கூடாரத்தில் உனக்குப் பக்கத்திலேயே இருக்கும் துரோகியை நம்பாதே"

# Posté le lundi 05 janvier 2009 10:00

Modifié le lundi 24 août 2009 16:42

சென்னீரில் ஈழம் கண்ணீரில் தமிழினம், வெட்ட வெட்ட தளிர்க்கும், அருகம்புல், கொல்ல கொல்ல பிறக்கும் தமிழினம்,

சென்னீரில் ஈழம் கண்ணீரில் தமிழினம், வெட்ட வெட்ட தளிர்க்கும், அருகம்புல், கொல்ல கொல்ல பிறக்கும் தமிழினம்,
தமிழ் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என் மூச்சிலும் தமிழ் என் உயிரிலும் தமிழ் தமிழுக்கான தமிழ் தமிழீழம் வெல்லும் தமிழ்


உலக மக்களே !!!
உலகத்தின் முதல் இனம் அதுவும் வேர் இனம்!!!தரணியின் முதல் குடி மக்கள்!!பண்பாட்டின் மறு பெயர் கொண்ட தமிழினம்!!! பயங்கரவாதம் என்ற சொல்லை கூறி எம் இனத்தின் மீது எதிரியானவன் இனப் படுகொலையை நிகழ்த்துவது உன் கண்களுக்கு தெரியவில்லையா??
நாம் செய்த தவறுதான் என்ன??நாமும் உங்களைப் போல வாழ விரும்பியது தப்பா??நாம் இந்த உலகில் வாழ தகுதியற்றவரா??
நாம் வாழ வழி கேட்டால் அது பயங்கரவாதமா??ஏன் எம்மை வாழவும் விடமாட்டிர் என்கிறீர்கள் சாகவும் வழி விடுகிறீர்கள் இல்லை ??நாம் என்ன உயிரற்ற ஜடங்களா??
மானம் கேட்ட ஜீவன்களா இல்லை இல்லை நாம் மறத் தமிழர் செத்தாலும் நாம் அனைவரும் சாவோம் எதிரியின் காலடியில் நாம் வீழ மாட்டோம் உலகே !!!!
நாம் ஆண்ட இனம் உலகத்தின் மூத்த குடிமக்கள் தனித்துவ அடையாளம் கொண்ட இனம் நாம் வீரத்தின் வழி வந்த உயர் குடிமக்கள் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்துவோம் !!!எம் உயிரில் தமிழ் என்னும் தேன் மதுரம் எம் இரத்த நாளங்களில் ஓடும் வரை நாம் வீழ மாட்டோம் விழ விழ எழுவோம் ஒன்றாய் விழுந்து ஒன்பதாய் எழுவோம் என்ற வரிக்கு அமைய எழுந்து நிப்போம்,ஈழத்தின் மீது சிங்கள கொடிய அரசுடன் பாரத தேசமும் சேர்ந்து எம் தமிழ் இனத்தின் மீது இனப்படுகொலையை செய்கின்றன???என்ன பரிதாபம் ??என்ன கொடுமை இது ??தாயே பிள்ளைகளை கொலை செய்வது போல் இல்லையா??உங்கள் இரத்த உறவுகள் நாங்கள் இல்லையா??எம்மை கொன்று குவிப்பது துரோகம் இல்லையா??நாம் வாழ துணை நிக்க வேண்டிய நீயே எம்மை அழிப்பது நியாயமா??
நீங்கள் செய்வதுக்கு தண்டனை நிச்சயம் உண்டு என் பாரத தேசத்து உறவுகளே,சர்வதேசமே எம் இனம் அழிக்கப் படுவது தெரிந்தும் தெரியாது போல நடிப்பது நல்லாவா இருக்கின்றது??எம்மை சிங்கள இனவாத அரசுடன் சமாதனம் பேச அழைத்து சென்றது எம்மை அழிக்கத்தான் என்பதை எமக்கும் தெரியும் ஆனால் நாம் எந்த மக்களுக்கும் துரோகம் பன்னதவர்கள் என்பதை உலக மக்களுக்கு காட்டவே நாம் சமாதனம் என்னும் உங்கள் மாய வலைக்குள் வந்தோம்!!!நாம் என்ன முட்டாள் என நினைத்துக் கொண்டாயா??குனிய குனிய குட்டுரவனும் மடையன் குட்ட குட்ட குனியிறவனும் மடையன்என்பதை புரியாதவர்களா நீங்கள்???
இன்று எம் இனம் ஆயிரம் ஆயிரம் கொத்து கொத்தாக அழிக்கப் படுவதுக்கு நீயும் ஒரு கரணம் என்பது தெரியாத எமக்கு ??ஏன் எங்களை வச்சு உங்கள் வல்லாதிக்க போட்டி??விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை போன்று அல்லவா உள்ளது உமது நாடகங்கள் ??? உங்களது தவறை திருத்தி எம் இனத்தின் விடுதலைக்கு வழி அமைக்க வேண்டாமா??எனியும் எம் இனத்தின் அழிவை பார்க்கப் போகின்ரிர்களா??எம் மக்கள் உங்கள் வீதிகளில் இறங்கி நிப்பது தெரிகின்றதா??எம் இனத்தின் வழி புரிகின்றதா??தமிழர் அனைவரும் விடுதலையின் விருட்சங்கள்

விடுதலை பெரும் வரை ஓயமாட்டோம் என்பதை அடித்துக் கூறுவோம் உங்கள் செவிப்பறைகள் கேட்க்கும் வரை
எம் இனம் துடி துடித்து தினம் தினம் பசி பட்டினி குண்டு வீச்சுக்களால் கொல்லப்படுவதைப் பார்த்து கண்கள் குளமாகின்றன அழுது அழுது களைத்து விட்டோம் ஆனாலும் விட மாட்டோம் உலகத்தின் மன சாட்சியை தட்டி எழுப்பும் வரை !!!எம் இனம் அழிந்த பின்பு நாம் வாழ்ந்து என்ன பயன் எம் இனத்தின் அடிமை சுவரை இடித்து வீழ்த்தும் வரை நாம் ஓயப் போவது இல்லை ,உலகே எமக்கு விடுதலை வேண்டும் வாழ்க்கை வேண்டும் எம் ஈழம் வேண்டும் உதவி செய்யா விடினும் உபத்திரம் கொடுக்காதே??நாம் சிதைவுகளுக்குள் ருந்து போராடி மீண்டேளுவோம் எம் இனத்தின் அடிமை விலங்கை உடைத்து தகர்ப்போம் என்பதை உலக்கு அடித்துக் கூறுவோம்
தமிழர் நாம் அனைவரும் ஒரு தாய் வயித்துப் பிள்ளைகள் எமக்குள் குரோதம் வேண்டாம் எம் இனத்தின் அடிமை விலங்கை நாம்தான் உடைக்க வேண்டும் மலைபோல் எழுவோம் ஒற்றுமையை வெளிக்கொனருவோம் ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்துவோம் ஒவ்வரு தமிழனின் கடமை
நம் கையில் நம் விடுதலை நம் கையே நமக்கு துணை என்றதுக்கு அமைய நாம் ஈழம் வெல்வது உறுதி
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்

என்றும் தமிழிலும் தாய் நாட்டிலும் உயிரான உங்கள் பரத்

# Posté le lundi 05 janvier 2009 10:08

Modifié le jeudi 13 août 2009 08:51

"தமிழன் என்றே சொல்லடா..... தலை நிமிர்ந்து நில்லடா...... தாயை நேசி....அவள் தந்த தமிழை சுவாசி..."

"தமிழன் என்றே சொல்லடா..... தலை நிமிர்ந்து நில்லடா...... தாயை நேசி....அவள் தந்த தமிழை சுவாசி..."
எங்கோ பிறந்தோம்! எங்கோ எங்கோ வளர்ந்தோம்!
இங்கே சந்தித்துக் கொண்டோம்! இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்! முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை! இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை! எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை! அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக்க கொள்வோம்! பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் !
சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்!
இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்!
உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க நம்பிக்கை தருவோம்!
நன்மைகள் வளர முயற்சிப்போம்! நட்பால் உயர்ந்து சாதிப்போம்

# Posté le lundi 05 janvier 2009 10:23

Modifié le mercredi 28 octobre 2009 08:03

வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்...

வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்...
eelamboys london varuvom france therukku
wait and see
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le lundi 05 janvier 2009 10:34

Modifié le dimanche 16 août 2009 18:14